×

இளம்பெண் மாயம்

பண்ருட்டி, மே 21: பண்ருட்டி அருகே நடுசாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் சேவியர் (32). இவரது மனைவிக்கு புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அவரை பார்ப்பதற்காக கடந்த 11ம் தேதி சேவியரின் தங்கை புளோரோ இன்சியா (26) புதுச்சேரி சென்றார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை, வீட்டுக்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேவியர் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான புளோரோ இன்சியாவை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...