அண்ணாநகர்: குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீசியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் முனியப்ப நகர் 3வது தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் கன்னியப்பன். இவர், நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் 3வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகுமுத்து (38), கருப்பசாமி (32), வாஞ்சிநாதன் (18), வீரமணி (21), முருகன் (23) உள்பட 8 பேர் வசிக்கின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் சத்தத்துடன் பாட்டு பாடியபடி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.