×

நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம், மே 21: மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில், ‘நல்லதோர் லட்சியம் அறக்கட்டளை’ தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அறக்கட்டளை தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வினோத், மைக்கேல், அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பின்னர், அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர். மேலும், 2 மாணவர்களுக்கு பள்ளி படிப்புக்கான கட்டணம், ஒருவருக்கு இஸ்திரி பெட்டி, துப்புரவு பணியாளர்கள் 18 பேருக்கு ஆடைகள், 300 பேருக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு