×

மதுராந்தகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறப்பு

மதுராந்தகம், மே 21:மதுராந்தகம் நகரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு, பேருந்து நிலையம் எதிரே அம்மா குடிநீர் விற்பனை நிலையம் உள்ளது. இதில், குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. குறைவான விலையில் கிடைக்கும் குடிநீர் பாட்டில்கள் என்பதால், அனைத்து தரப்பினரும் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு குடிநீர் பாட்டிலை கையோடு வாங்கி சென்றனர். இந்நிலையில்,  இந்த விற்பனை நிலையம் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. மற்ற தனியார் குடிநீர் பாட்டில்கள் 20 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதனை வாங்க பொருளாதார ரீதியாக சிரமப்படுகின்றனர். தனியார் குடிநீர் பாட்டில் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காகவே, இந்த அம்மா குடிநீர் பாட்டில்களின் விற்பனையை அதிகாரிகள் நிறுத்திவிட்டதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்  சாட்டினர்.

தற்போது பொதுமக்கள் மற்றும் பயணிகளை கோடை வெப்பம் வேறு கடுமையாக வாட்டி வதைக்கிறது. இந்நிலையில்  உடனடியாக மீண்டும் பழையபடி இந்த விற்பனை நிலையத்தை திறந்து அரசு குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற செய்தி  தினகரன் நாளிதழில் வெளியானது இதன் எதிரொலியாக தற்போது, அந்த அம்மா குடிநீர் நிலையம் தற்போது திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கோடையில் குறைந்த விலையில் குடிநீர் வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : drinking water station ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...