×

கிக்பாக்சிங்கில் தங்கம் மாணவனுக்கு பாராட்டு

செங்கல்பட்டு, மே 21; செங்கல்பட்டு அடுத்த மலாளிநத்தம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி. இவரது மகன் இளங்கோவன் (17), செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவருகிறான். கடந்த மே 15ம் தேதி நேபாளம் தலைநகர் காத்மாண்டில் சர்வதேச அளவில் நடந்த கிக்பாக்சிங் போட்டியில் இளங்கோவன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முத்தாய் தற்காப்பு கலை சங்கம், குங்பூ பயர் டிரக்‌ஷன் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் பாராட்டு விழா நடந்தது. சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் ஜெகன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்ற இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் பஞ்சாப் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த போட்டியில் பதக்கங்களை வென்றுள்ளார். இதுகுறித்து இங்கோவன் கூறுகையில், வரும் டிசம்பரில் கம்போடியாவில் 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறேன். என்னை போன்ற ஏழை மாணவர்கள், சாதனைபுரிய தமிழக அரசு உதவ வேண்டும். அப்படி செய்தால் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வென்று தருவேன்’’ என்றார்.

Tags : student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...