வீரவநல்லூர், மே 21: சீராக குடிநீர் விநியோகிக்க கோரி சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கரிசூழ்ந்தமங்கலம் வடக்கூர் பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பக்கத்து தெருக்களிலும், ஆற்றிலும் தண்ணீர் எடுத்துவந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.