ஏர்வாடி, மே 21: ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தில், ருக்மணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயிலில் உள்ள இன்வெர்ட்டர் பராமரிப்பு பணிக்காக திருக்குறுங்குடியை சேர்ந்த மகேஸ்வரன்(21) சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுப்பையா மகன் நம்பிராஜன்(17) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 3 பேர் குடிபோதையில் தகராறு செய்து மகேஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஏர்வாடி எஸ்ஐ இமானுவேல் வழக்கு பதிந்து மகேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்.