புளியங்குடி, மே 21: சேர்ந்தமரம் எஸ்ஐ உத்திரகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரசிகாமணி சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தியபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வடநத்தம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் மகன் ரமேஷ்குமாரை கைது செய்தனர். புகையிலை ெபாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் சேர்ந்தமரம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பெட்டிக்கடையில் நடந்த சோதனையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருள் விற்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தன்னூத்து தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன்(41) என்பவரை கைது செய்தனர்.