தூத்துக்குடி, மே 21: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (21ம் தேதி) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டலுக்கு அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Re totaling/ Re valuation என்ற தலைப்பினை Click செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.