×

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அன்னதானம்

உடன்குடி, மே 19: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பிரசாத பைகள் மற்றும் அன்னதானம் 3 இடங்களில் வழங்கப்பட்டது. தூத்துக்குடி முள்ளக்காடு, ஆத்தூர் பாலம், aஆறுமுகநேரி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன துணைத்தலைவர் தனவேல் தலைமை வகித்து பக்தர்களுக்கு பிரசாத பைகளையும் வழங்கினார். ஸ்டெர்லைட் நிறுவன சமூகப்பணிகள் பொதுமேலாளர் சர்வேஸ்வரன், அலுவலர்கள் ஜெயா, அருணாசலம், பொன்ரதி, ராஜ்குமார், சுப்பையா முன்னிலை வகித்தனர். மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயலர் சிந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோசாலை நிறுவனர் மகராஜா சுவாமிகள் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திரிசுதந்திர தீட்சிதர்கள் ஆசியுரை வழங்கினர். பக்தர்களுக்கு பிரசாதப் பைகள், குடிநீர், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இதில் தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன் ஏற்பாட்டில் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags : Sterlite Company ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 15,000 டன்...