அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல்

வைகுண்டம், மே 19:  ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டது. இரவு 10.10 மணியளவில் வைகுண்டம் அருகே பொன்னன்குறிச்சி பகுதியில் வரும்போது  மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இருப்பினும் டிரைவர் சாதுர்தியமாக பஸ்சை மின்னல் வேகத்தில் வைகுண்டம் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். புகாரின் பேரில் போலீசார், அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். பஸ்சில் வந்த 35 பயணிகளும், மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: