கோவில்பட்டி, மே 19: கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 256 மதுபாட்டில் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று (19ம்தேதி) நடக்கிறது. இதையொட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் மது விற்பனை நடப்பதாக கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசனுக்கு தகவல் கிைடத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வள்ளுவர் நகரில் வெள்ளத்துரை(45) என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது வீட்டில் யாரும் இல்லாததால் அங்கிருந்த 256 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்து வெள்ளத்துரையை தேடி வருகின்றனர்.