வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்கத்திலான சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை

நெல்லை, மே 19:  வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மருத்துவ கடவுளான தன்வந்திரி பெருமாள் கோயிலில் உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான சனி பகவான் பிரதிஷ்டை ஜூன் 14ம்தேதி நடக்கிறது.  இது குறித்து முரளிதர சுவாமிகள் கூறுகையில், ‘‘ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகநலனுக்காகவும், மக்களின் நோய்களை தீர்க்கக்கூடிய மையமாகவும் உள்ளது. ஆண்டுமுழுவதும் சிறப்பு யாகங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இதனிடையே பக்தர்களின் நலனுக்காக தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி ஆழத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் 13 படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி இந்த சனிபகவானை தரிசிக்க முடியும். உலகிலேயே முதல்முறையாக பாதாளத்தில் தனிக்கோயில் அமைக்கப்பட்டு அங்கு தங்கத்தாலான சனி பகவான் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கும்பாபிஷேக வைபவம் ஜூன் 14ம்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது’’ என்றார்.

Related Stories: