சிவகிரி, மே 19: வாசுதேவநல்லூர் ராஜ பழநியாண்டவர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை முருகப்பெருமானுக்கு 21 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டாடை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ பழநியாண்டவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வைகாசி விசாக கட்டளைதாரர் ராமச்சந்திரன் பிள்ளை, பாண்டியம்மாள் குடும்பத்தினர், விழாக்குழுத் தலைவர் பொன்மாரியப்ப பிள்ளை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.