பூட்டிய வீட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

மானூர், மே 19:    நெல்லை ராமையன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜன். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு அறிந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிச் சென்றார். பின்னர் ராஜன் வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த ரூ.36,800, வங்கி காசோலை புத்தகம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ் மற்றும் பல்வேறு பொருட்களை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ மாடசாமி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் இதில் ஈடுபட்டது கோவை அருகேயுள்ள சரவணப்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: