நாங்குநேரி, மே 19: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவுஆண்டையொட்டி நாங்குநேரிக்கு வந்த ஜோதி ஊர்வலத்தை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில் காங்கிரசார் வரவேற்றனர். இதில் கர்நாடகா மாநில தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரகாசம், நெல்லை மாநகர மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆனந்த், சால்கர், நாங்குநேரி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ரவீந்திரன், முன்னாள் இளைஞர காங்கிரஸ் பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், நகரத் தலைவர்கள் நாங்குநேரி சுடலைக்கண்ணு, பைசல், சீராக் இசக்கியப்பன், மகளிர் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் வசந்தா, மற்றும் சுவாமிநாதன், அழகியநம்பி, ராஜகோபால், உடையார், விக்டர், இளங்கவி, அன்பு, முத்துசுவாமி, எட்வின் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.