பாளையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம்

நெல்லை, மே 19:  நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது.  கூட்டத்திற்கு தலைவரான ஓய்வுபெற்ற எஸ்ஐ சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணன், வானமாமலை, முன்னிலை வகித்தனர். செயலாளர் குத்தாலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் 2018- 19ம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 400 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றவர்கள் மற்றும் பிளஸ்2 தேர்வில் 450 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் கிரேடு 9 மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் இதற்கான மதிப்பெண்கள் சான்றிதழ் நகலுடன் ஜூன் 30ம் தேதிக்குள் சணமுகசுந்தரம், 173 காவலர் குடியிருப்பு, சாந்திநகர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆகஸ்ட் 11ம் தேதி 53வது பரிசளிப்பு விழாவை பாளை கேடிசி நகர் மகராசி மகாலில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் பாபநாசம், நிர்வாகிகள் வேலு, செல்வராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், விநாயகம், சுப்பிரமணியன், சுப்பையா, முருகன், பால்துரை, சங்கரன் முருகேசன், ராமதாஸ், வேலுதாஸ், வெங்கடேஸ், சுடலை முத்து, டாக்டர் அர்ச்சுனன், பண்டாரம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். துணைத்  தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

Related Stories: