×

களியக்காவிளையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு

களியக்காவிளை, மே 19: பெங்களூரில் இருந்து பெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை கடந்த ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்டது. பெங்களூரில் இருந்து மங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் வழியாக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் களியக்காவிளை ஜங்ஷன் வந்தடைந்தது. ஜோதி யாத்திரை குழுவினருக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், மேற்கு மாவட்ட ஓபிசி தலைவர் ஸ்டூவர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், சஜித் டேனியேல், வக்கீல் சாலின், அருள்குமார், ஜிஜி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கபிஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் களியக்கா விளையில் இருந்து திரும்பிய ஜோதி யாத்திரை மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் வழியாக இரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்தது. அங்கிருந்து நேற்று காலை புறப்பட்டு திருநெல்வேலி மதுரை வழியாக வரும் 21ம் தேதி பெரும்புதூர் சென்றடைகிறது.

Tags : Rajiv Gandhi Memorial Jyoti Pilgrimage ,Kalaka Kail ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி