திருப்பூர், மே 19: அவிநாசி, சேவூர் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட 270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில், அவிநாசி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கருப்புச்சாமி, சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் அவிநாசி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அவிநாசி சேவூர் சாலை, கோவை பிரதான சாலை, புதிய பஸ் நிலையம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், டீக்கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகள், உணவுக் கூடங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 210 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.