சூறாவளிக்காற்றுக்கு தென்னைகள் சாய்ந்தன

பொங்கலூர், மே 19:பொங்கலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இடி,மின்னலுடன் லேசான மழையும் பெய்தது. சூறாவளி காற்றுக்கு பொங்கலூர், தேவனம்பாளையம், உகாயனூர், வேலம்பட்டி, அவினாசிபாளையம், கொடுவாய், தாயம்பாளையம், உள்ளிட்ட பல கிராமங்களில்  200க்கும் மேற்பட்ட தென்னைகள் வேருடன் சாய்ந்தன. மேலும் வீடுகளின் கூரைகள் பறந்ததோடு, மின் கம்பங்களும் சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக எங்களுக்கு மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மேலும் பாதிக்கப் பட்ட தென்னை விவசாயிகளுக்கு  அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: