×

மலர் கண்காட்சி காண அலைமோதிய மக்கள் கூட்டம்

ஊட்டி, மே 19 : மலர் கண்காட்சியின் 2வது நாளாக நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களைகட்டியது. மலர் கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியது. நேற்று முன்தினம் மட்டும் மலர் கண்காட்சியை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல சாலைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்றினர். மேலும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம், கூடை மற்றும் 30 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்களை கண்டு வியந்தனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்றும் தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி ஆகியவை நடந்தது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். நேற்று மதிய உணவிற்காக ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2வது நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வரத்த பல மடங்கு உயர்ந்தது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...