பொள்ளாச்சி, மே 19: பொள்ளாச்சி நியூஸ்கீம்ரோட்டில் சென்ற காரில் தீ பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி பல்லடம் ரோடு அண்ணாஅவன்யூவை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் நேற்று மதியம் சுமார் 2மணியளவில், நகரின் மையப்பகுதியில் வாகன போக்குவரத்து மிகுந்த நியூஸ்கீம்ரோட்டில் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதி இருக்கையின் கீழ் இருந்த காஸ்சில் திடீர் என கசிவு ஏற்பட்டது. பின் சிறிதுநேரத்தில் தீப்பிடித்து அந்த தீ இருக்கையில் பரவியது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், கரை நிறுத்தி இறங்கி தப்பினார். தீ விபத்து நடந்த இடம் அருகே மருத்துவமனை இருந்ததால், உடன் அப்பகுதியினர் தண்ணீர் உற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அருகே உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.