×

நியூஸ்கீம் ரோட்டில் காரில் தீ பிடித்து விபத்து

பொள்ளாச்சி, மே 19:  பொள்ளாச்சி நியூஸ்கீம்ரோட்டில் சென்ற காரில்  தீ பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி பல்லடம் ரோடு அண்ணாஅவன்யூவை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் நேற்று மதியம் சுமார் 2மணியளவில், நகரின் மையப்பகுதியில் வாகன போக்குவரத்து மிகுந்த நியூஸ்கீம்ரோட்டில் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதி இருக்கையின் கீழ் இருந்த காஸ்சில் திடீர் என கசிவு ஏற்பட்டது. பின் சிறிதுநேரத்தில் தீப்பிடித்து அந்த தீ இருக்கையில் பரவியது.  இதைகண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், கரை நிறுத்தி இறங்கி தப்பினார். தீ விபத்து நடந்த இடம் அருகே மருத்துவமனை இருந்ததால், உடன் அப்பகுதியினர் தண்ணீர் உற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அருகே உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

உடன் சம்பவ இடத்துக்கு, நிலைய அலவலர் ராசாமி தலைமையில் தீயணைப்பு குழுவினர் விரைந்து, காரின் உள்பகுதியில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  நியூஸ்கீம் ரோட்டின் ஒரு பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுபாதையில் விடப்பட்டது. காரில் எரிந்த தீயை  முழுமையாக அணைத்த பிறகே, சுமார் ஒருமணிநேரத்திற்கு பிறகு, காரை அப்புறப்படுத்தியபின் அந்த வழியாக மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியது. நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உண்டானது.

Tags : Fire accident ,Newcaste Road ,
× RELATED கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு