×

இடியுடன் கோடை மழை

பொள்ளாச்சி, மே 19:   பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில்  இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையின்றி வறட்சியை நோக்கி சென்றது. கடந்த மாதத்தில் சில நாட்கள் மழை பெய்தது. அதன்பின் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. வெகுநாட்களுக்கு பிறகு கடந்த 15ம் தேதி இரவில் பலத்தக்காற்றுடன் கன மழை சில மணிநேரம் பெய்தது. அதன்பின் நேற்று முன்தினம் இரவில் பலத்த காற்று வீசியதுடன் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது.  நகர் பகுதியில் மழை குறைவாக இருந்தாலும், ஆழியார், வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்துள்ளது. இடி மின்னலுடன் மழை பெய்ததால்,  நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் நேற்று காலை 9மணிவரை என தொடர்ந்து 15மணிநேரம்  மின்தடை ஏற்பட்டது.

Tags : Thunderstorms ,
× RELATED சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில்...