×

நல்லூத்துக்குளி கிராமத்துக்கு செல்லும் குறுகலான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி, மே 19:   பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்திலிருந்து நல்லூத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக பாலக்காடுரோடு பொன்னாயூக்கு செல்லும் சாலையில், பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்து உள்ளது. இப்பகுதியில் ஆங்காங்கே கிராமங்கள் பல இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகம் உள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தின் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. அதிலும் நல்லூத்துக்குளி செல்லும் ரோட்டில் ஒரு பகுதியை கடந்து செல்லும் பிஏபி கால்வாயின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலமானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும், அந்த இடத்தில் வளைவுகள் அடுத்தடுத்து உள்ளதால், குறுகலான பாலம் எதுவென்று தெரியாத நிலை ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு  முன்பு அந்த வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று, கால்வாய் மேல் பகுதியில் உள்ள சிறுபாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில், இடிந்து சேதமானது. மேலும், குறுகலான பாதை என்பதால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, வாகன போக்குவரத்து வசதியாக நல்லூத்துக்குளி செல்லும் சாலை மற்றும் சிறு பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,village ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...