பஞ்சு மில்லில் தீ விபத்து

திருப்பூர், மே 19:  மங்கலம் அருகே நடுவேலம்பாளையத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில், வேஸ்ட் பஞ்சு அரைக்கின்ற மெஷினில் திடீரென கரும்புகை வெளியேறி, தீ பிடித்தது. உடனே, தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவ விடாமல், தீயை அணைத்தனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: