பொள்ளாச்சி, மே 19: பொள்ளாச்சி அருகே முத்தூரிலிருந்து டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோட்டை, 10ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவலத்தால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்துக்கு செல்லும் பலர், பாலக்காடு முத்தூரிலிருந்து துவங்கும் ரோட்டையே அதிகம் பயன்படுத்துகின்றனர். விவசாய தோட்டங்கள் நிறைந்த இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் தொடர்ந்துள்ளது. ஆனால், சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட ரோட்டிலிருந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிபெயர்ந்து வர ஆரம்பித்தது. பின் நாளடைவில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளமானது. மழைக்காலத்தில் அந்த ரோட்டில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுகிறது.