மின்சாரம் தாக்கி பெண் பலி

கோவை, மே.19: கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவருடைய மனைவி திருநிறைசெல்வி(37). இவர் நேற்று முன் தினம் மாலை தொலைக்காட்சியை ஆன் செய்ய முயன்றார். அப்போது தொலைக்காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து திருநிறை செல்வி மின்வயரை சரி செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: