டாஸ்மாக் கடையை உடைத்து பாட்டில்கள் திருட்டு

மதுரை, மே 19: மதுரை அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.71 ஆயிரம் மதிப்புள்ள பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் வரிச்சியூர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி கடையை பூட்டி விட்டு 17ம் தேதி கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் முன் பக்க கிரில்கேட் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பாட்டில்கள் சிதறி கிடந்தது. ரூ.71 ஆயிரத்து 400 மதிப்புள்ள பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கருப்பாயூரணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: