×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

செம்பட்டி, மே 19: திண்டுக்கல் அடுத்த ஆரியநல்லூரை சேர்ந்தவர் தங்கவேல் (47). கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்த சண்முகபாண்டி என்பவரது வீட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தன் மீது விழுந்த மின்விளக்கு எடுத்தார். அப்போது திடீர் என மின்சாரம் பாய்ந்து தங்கவேல் தூக்கி விட்டார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...