தராசு திருடிய 4 பேர் கைது

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் எம்விஎம் அரசு கலைக்கல்லூரி அருகில் தர்பூசணி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று வந்து பார்த்த போது கடையின் தராசு திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வேலுச்சாமி நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தராசை திருடிய திண்டுக்கல் காமராஜர்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), நவாஸ் கண்ணன் (20), பொன்நவீன் (28). பெரிய கடை வீதியை சேர்ந்த கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த தராசு மீட்கப்பட்டது.

Related Stories: