கொலைமிரட்டல்...

வத்தலக்குண்டு, மே 19: நிலக்கோட்டை அருகே முசுவனூத்து தனியார் மில்லில் வேலை செய்த 2 பேரை பணியிட மாறுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் மில் மூடப்பட்டது. பின்னர் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்ததன்பேரில் மில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேலாளர் மதன்குமார், ‘மில்லில் வேலை செய்யும் 5 பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மில்லின் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் டிஎஸ்பியிடம் மனு அளித்தார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: