×

உத்தமபாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் திடீர் கனமழை

உத்தமபாளையம், மே 19:  உத்தமபாளையம் பகுதிகளில் பெய்த கனமழையால் மின்சார கம்பங்கள் ஒடிந்தன. மரங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, உ.அம்பாசமுத்திரம், கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது. இதனால் அனைத்து ஊர்களிலும் மின்சார தடை ஏற்பட்டது. இரவு 8.45 மணி முதல் 10.30 மணி வரை மக்களை மிரட்டும் வகையில் மழை கொட்டியது. உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அருகே  மின்சாரகம்பம் உடைந்தது. அங்கே இருந்த மரங்களும் சாய்ந்தது. இதனால் உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய அதிகாரிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மின்தடையை சரிசெய்தனர். மரங்கள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்