×

வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு வைகாசி விசாக பாலாபிஷேகம் 500 பேர் பால்குடம் எடுத்து ஊர்வலம்

தேனி, மே 19:  தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேற்று வைகாசி விசாக திருவிழாவை தொடர்ந்து 500 பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி அருகே உள்ள வீரபாண்டி கோயிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்மன் உற்சவர் சிலை இருக்கும் வீரபாண்டி கிராம கோயில் வீட்டில் இருந்து, மூலவர் சிலை அமைந்திருக்கும் கோயிலுக்கு நேற்று காலை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். அம்மனுக்கு பாலாபிேஷகம் உட்பட பல்வேறு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags : Veerapandi Gowmariamman ,procession ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...