×

தொழிலாளர் துறை அதிரடி 250 குரோஸ் திரி பறிமுதல்

விருதுநகர், மே 19: விருதுநகரில் உள்ள அல்லம்பட்டி முக்குரோட்டில், விருதுநகர் கிழக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு வேனை சோதனை செய்ததில், அதில் இருந்தவர்கள் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராமசாமி (62), மணிகண்டன் (22) என்பதும், பட்டாசு தயாரிக்க பயன்படும் 250 குரோஸ் வெள்ளை திரியை அனுமதியின்றி, எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. வேன் மற்றும் வெள்ளைத் திரியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மணிகண்டன், ராமசாமி ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Work force ,
× RELATED பணி மூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த கோயில் ஊழியர்களுக்கு பணி உயர்வு