×

துறையூர் அருகே நடந்து சென்ற பெண்கள் மீது பைக்கால் மோதியவர் சாவு

துறையூர், மே 19: துறையூர் அருகே  பைக் மோதிய  விபத்தில் 2 பெண்கள் காயமடைந்தனர். பைக்கை ஓட்டி வந்தவர் கீழே விழுந்து பலியானார். துறையூர் அருகே வெங்கடாசலபுரம் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த  பழனியாண்டி மகன் முருகன்(50). இவர் தனது பைக்கில் நேற்று  முன்தினம் இரவு வெங்கடாசலபுரத்திலிருந்து துறையூர் நோக்கி சென்றார்.  அப்போது புடலாத்தி பிரிவு ரோடு அருகே கரட்டடியான் கோயில் சாமி கும்பிட  சென்று கொண்டிருந்த கோத்தகிரி பாண்டிநகர்  பகுதியைச் சேர்ந்த யோகராஜ் மனைவி சரிதா(28),  திருப்பூர் மாவட்டம, ஊத்துக்குளி முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த  பெருமாள் மனைவி சரசு(40) ஆகிய இருவர் மீதும் முருகன் ஓட்டிச் சென்ற பைக்  மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த முருகன் துறையூர் அரசு  மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும்  வழியில் புலிவலம் அருகே இறந்தார்.  காயமடைந்த 2 பெண்களும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெறுகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : women ,Thuraiyur ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது