×

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை, மே 19:  மணப்பாறை அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். ஸ்வீட் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர் நேற்று விராலிமலை சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிவசங்கரி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து சிவசங்கரி மணப்பாறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : pound chain ,
× RELATED நகை பறித்துவிட்டு மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மர்ம நபர்