×

சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க கஞ்சா பொட்டலத்துடன் சென்ற வாலிபர் சிக்கினார்

திருச்சி, மே 19:  திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம்தெருவை சேர்ந்தவர் தர்மா(எ)தர்மராஜ்(26), கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார். இவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தர்மா மத்திய சிறைக்கு சென்றார். அப்போது சிறை வளாகத்தில் பணியில் இருந்த காவலர் ரமேஷ் என்பவர் தர்மாைவ சோதனை செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த டவுசரில் 2 கஞ்சா  பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரமேஷ், கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற போலீசார் தர்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ