திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, மே 19: திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் பல கடைகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதாக பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 100 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை விற்பனை செய்த கடைகாரர்களிடமிருந்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.

Related Stories: