திருவையாறு,மே 19: திருவையாறு அடுத்த கல்ணபுரம் வள்ளலார் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேஷ் (31). பொன்னாவரை மெயின்ரோட்டை சேர்ந்த சுப்ரமணியன் மகன் வினோத்(30). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்யாணபுரம் பொன்னாவரை ரோட்டில் வினோத், ராஜேஷை தகாத வார்த்தையால் திட்டி அடித்துள்ளார். இதில் காயமடைந்த ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.