×

அரங்குளலிங்கம் நாயகி கோயிலில் விசாக தேர்திருவிழா

புதுக்கோட்டை, மே 19:  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் சோழர்காலத்து அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் வெள்ளி, அன்னம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் காலை, மாலை என இரு வேளைகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முதல் தேரில் அரங்குளலிங்கம், சுவாமி அம்பாளையும் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Visakhapatnam ,festival ,Arunkulingamangi temple ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...