×

புதுக்கோட்டையில் மயிலை கொன்று விற்க முயன்றவர் கைது

புதுக்கோட்டை, மே19: புதுக்கோட்டையில் மயிலை கொன்று விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுளள கிராமப்புறங்களிலும், வனப்பகுதியிலும் மயில்கள் கோழிகள் போல ஹாயாக சுற்றித்திரிகின்றனர். தேசியப்பறவையான இவைகள் ஆற்றங்கரை, புதர்கள் நிறைந்த பகுதிகளில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனத்தை பெருக்கி வருகிறது. முருகப்பெருமானுக்கு உகந்த வாகனம் என்பதால் மயிலை யாரும் துன்புறுத்துவது கிடையாது. இந்நிலையில் புதுக்கோட்டை  மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின் பேரில் கீரனூர் வனச்சரக அலுவலர்  சங்கர் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  செம்பட்டூர் கன்மாய் அருகே இறந்த மயிலுடன் வந்தவரை பிடித்து வன அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுக்கோட்டை  ரெங்கம்மாள் சத்திரம் மணி மகன் கமல்ஹாசன் (35) என்பதும், இவர்  கண்ணி வைத்து 2 மயில்களை பிடித்து கொன்று, கால்களை வெட்டி அதன் தோகைகளை பிடுங்கு வான்கோழிபோல வைத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து மயிலை பறிமுதல் செய்து  கமலஹாசனை கைது செய்த வன அலுவலர்கள், கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags : Pudukkottai ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...