பொன்னமராவதி, மே 19: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பூவாடைக்காரி அம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடந்தது. வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு 310 பெண்கள் பங்குபெற்று விளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெயிலான் கரை பங்காளிகள் செய்திருந்தனர். இதில் ஆலவயல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.