×

ஆண்டிபட்டி அருகே கறவை மாடுகள் திடீர் சாவு

ஆண்டிபட்டி,மே 17: ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி நாகலட்சுமி (39). இவர் விவசாயி. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டத்திலேயே பசுந்தீவனங்களை வளர்த்து 10 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் கறவை மாடுகளுக்கு தண்ணீர் வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்த 4 கறவைமாடுகளின் வாயில் நுரைதள்ளி திடீரென இறந்தன. தகவலறிந்த கால்நடை மருத்துவர் அப்துல்ரகுமான் கால்நடைகளை பரிசோதித்தும், இறந்த கறவை மாடுகளை பிரேதப் பரிசோதனை செய்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...