திருச்சி, மே 17: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி புத்தூர் அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சகல நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, ஓமியோபதி மருத்துவ சிகிச்சை, யுனானி மருத்துவ சிகிச்சை, சுகப்பிரசவம் ஏற்பட மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் சிறப்பு சிகிச்சை பிரிவு நாள்பட்ட நோய்களுக்கு வர்ம சிகிச்சை பிரிவு மூளை நரம்பு பாதிப்பு குழந்தைகளுக்கு (ஆட்டிசம் குழந்தைகள்) சிறப்பு சிகிச்சை பிரிவுகள் ஒரே வளாகத்தில் பொதுமக்களுக்காக செயல்பட்டு வருகிறது. காலை 7.30-12 மணி வரையிலும் மதியம் 3-5 மணி வரையிலும் மருத்துவமனை திறந்திருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள்பட்ட, தீராத நோய்களுக்கு சித்தா, ஆயுர்வேதா ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களைக் கொண்டு ஆயுஷ் கிளப் செயல்பட்டு வருகிறது. மாலை 3-5 மணிவரை இந்த ஆயுஷ் கிளப் திறந்திருக்கும்.