குடியை மறக்க சிகிச்சை மருத்துவமனையில் டிரைவர் திடீர் சாவு

திருச்சி, மே 17: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மதுரை ரோடு பகுதிைய சேர்ந்தவர் கண்ணன்(40), டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் தினமும் கண்ணன் குடித்துவிட்டு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குடியை மறப்பதற்காக கே.கே.நகர் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென கண்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் டாக்டர்கள் விரைந்து உடனடி சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் இறந்தார். இதுகுறித்து மனைவி துர்காதேவி போலீசில் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: