×

தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக கோவையில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர் பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

திருச்சி, மே 17: தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக கோவையில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று (17ம் தேதி) கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2019-20ம் கல்வியாண்டின் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த ெதாழில் புரிவோர் மற்றும் சுய தொழில்புரிவோர் சேர்ந்து பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18வயது நிரம்பியவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சரளாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : Coimbatore ,
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...