செம்பட்டி, மே 17: சின்னாளப்பட்டியில் உள்ள வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஓட்டல்கள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். ஆய்வின் போது, துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், அகிலன், தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.