திருச்சி மாநகரில் நாளை 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம்

திருச்சி, மே 17: திருச்சி மாநகரில் நாளை 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த முகாம் ரங்கம் கோட்டத்தில் 6வது வார்டு டி.வி.கோயில் கிழக்கு 5ம் பிரகாரத்தில் பாரதியார் நகரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி, அரியமங்கலம் கோட்டத்தில்  27வது வார்டில் செந்தண்ணீர்புரம் மருந்தகம், பொன்மலை கோட்டத்தில், 42வது வார்டில் கே.கே.நகர் பெரியார் மணியம்மை மெடிக்கல் மிஷன், கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் 55வது வார்டில் குறத்தெருவில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இ.சி.ஜி.,  பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை  முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: