வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, பணம் கொள்ளை

துறையூர், மே 17: துறையூர் தங்கநகரைச் சேர்ந்தவர் மைக்கேல்துரை(48). இவர் கடந்த 7ம் தேதி குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றுவிட்டு நேற்று காலை துறையூருக்கு வந்தார். வீட்டிற்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது டிவி, பீரோவில் இருந்த 5 பவுன் செயின், ரூ.75 ஆயிரம் ஆகியவை கொள்ளையிடப்பட்டிருந்தது தெரிந்தது. தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: